854. |
வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர்
பூத வாதியும் பொங்கினன் மேற்செல
வாத வாதி யிவனை யடக்கினா
லேத வூதிய மில்லென வெண்ணித்தான்.
|
855. |
நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ்
சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான்
மல்லற் றானை மதனசித் தன்னெனுங்
கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.
|
856. |
அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப்
பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்
குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென்
றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.
|
857. |
தண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி
யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.
|
858. |
ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய்
வந்து தோன்றி மதுமயக் காற்றலி
னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.
|
859. |
உலகெ லாமவை யேயுயி ருண்டெனச்
சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று
பலக லாங்களுஞ் செய்வ பயனிலார்
புலவ ராவதன் றோவங்குப் போந்ததே.
|